Thursday, March 31, 2011

தூரம்

அண்ணி கிடைத்து விட்டாள் என்று
தங்கையும் தம்பியும்
மறு மகள் கிடைத்து விட்டாள் என்று
அப்பாவும் அம்மாவும்
அன்பாய் அழகாய் ஒரு துணைவி
அமைந்துவிட்டாள் என்று நானும்
சந்தோஷத்தில் திகைத்து இருந்தோம்.
நண்பன் வருந்திக் கொண்டிருக்கிறான்
காரணம்:
நண்பர்களுக்கிடையில்
பெண்ணொருத்தி
வந்தால் நட்பு
தூரமாகிவிடுமென்று.

Sunday, March 27, 2011

காளைக்கு வெட்கம்-6


தலையணைக்குள்
முகம் புதைத்து
பேசியது
வீட்டினுள்
தனியாய் பாடி
நடனமாடியது
கவிதையென்று
உன் பெயரை
கிறுக்கியது
இவையனைத்தையும், மற்றவையும்
உன்னிடம் சொல்லி
வெட்கப்பட
நாள் குறித்தாயிற்று

Saturday, March 26, 2011

காற்றில்லையெனில்


மழை ஒய்ந்து துளிகளை வைத்திருந்த
மரங்களின் கீழே
வெள்ளை மஞ்சள் என பூக்கள் பூத்திருந்த
மரங்களின் கீழே
சுட்டெரித்த சூரியனிடம் நிழல் தந்தென்னை காத்த
மரங்களின் கீழே
காத்திருந்தேன்
காதலிக்காகவும் காற்றிர்க்காகவும்.
எதேனனும் ஒன்றிலையெனில்
உயிர் வாழக்கூடுமோ?

Tuesday, March 22, 2011

காளைக்கு வெட்கம்-5


பத்திரமாக செல்
வந்து சேர்ந்துவிட்டாயா
நேரத்திற்கு உணவுக்கொள்
சிரித்துக்கொண்டே பேசு
பூச்சூடி பின்னலிடு
இருமுறையேனும் புடவையுடுத்து
ஆசைகள் ஒவ்வொன்றாய் கேள்
எல்லாம் கேட்டுவிட்டு
சீக்கிரமாக உறங்கு (உறங்கிவிடாதே).
இந்த ஆத்திச்சூடி
ஆரம்பம்தான்.
வெட்கப்படாதே.

Monday, March 21, 2011

அரைகிலோ கொலை

வாய் பொத்தி
குமட்டலை சமாளித்து
நூறு அடி தூரம்
தள்ளி நின்று
இரத்தக் கறை அதில்
சதையும் கொஞ்சம்
எழும்பும் நிறைந்த ஒரு
கருப்பு கவரை நண்பன்
தூக்கிக் கொண்டு
வரும் வரை
காத்திருக்கிறேன்.
வேகமாக வீடு வந்தடைந்ததும்
நண்பனையும் முந்திக்கொண்டு
சமையர்காரரிரடத்தில்
"அண்ணா, சிக்கன் கபாப் செஞ்சுடுங்க"
என்று உரைத்த பின்
மூச்சு வாங்கி
பின் கபாபை ருசித்த
கணம் உணர்வதுண்டு
நான் சைவம் என்று.

Sunday, March 20, 2011

நான் இராவணன்.நீங்கள்?


வெண்ணிற ஆடை அணிந்து
உன் தோழிகளுடன்
அணிவகுத்து நிற்கும் உன்னை
இரக்கமே இல்லாமல்
பிடித்து இழுத்து, கசக்கி
என் தேவை தீர்ந்ததும்
குப்பையில் எரியும் பொழுது மட்டுமே
நினைவு வரும்
உனக்காக வெட்டப்படும் மரங்களின்
எண்ணிக்கை.

Saturday, March 19, 2011

கண்ணாமூச்சி


பச்சை தாவணி போர்த்திய ஒரு
வயல் வெளியின் நடுவினிலே
ஓங்கி வளர்ந்து நின்ற ஒரு
தென்னை மரத்தின் நடுவினிலே
அணில்கள் ஓடும் காட்சியினை கண்டேன்.

இச்சை கொண்டு சத்தம் இன்றி
அதனருகினில் நடந்து செல்கையிலே
மரத்தினை சுற்றி நூறடியில் படிகள்
கொண்ட கிணற்றின் அருகினிலே
குயில்கள் இரண்டு கொஞ்சிக் குலாவியதை கண்டேன்.

ஆடை களைந்து கிணற்றில் இறங்கி
நீச்சல் பயில நினைக்கயிலே
நீலக்கடலில் துயிலெழும் ஞாயிறைப் போலே
தாவித் தாவி குதித்துக் கொண்டிருக்கும்
இரு தங்க மீன்களை கண்டேன்.

கிணற்றுப் படிகளில் அமர்ந்திருக்கையிலே
படிகளின் இடுக்கில் பூத்திருக்கும் பூக்களின்
தேனினை சுவைக்க வரும் வண்டை,
மடை திறந்த வெள்ளம் பாய்வது போல்
இந்த பேடை கண்டிட்டேன்.

நீ வரும் வரை காத்திருத்தலில்
இவையாவும் நான் தொலைந்த கதையன்றோ.

நீ வந்தாய்; பின் நின்று
என்கண் மறைதிட்டாய்;
கண்டு பிடி என்று ஏவல்லிட்டாய்.

நூறு காத தூரம் நீ தாண்டி நடக்கையில்
உன்னை அறிந்து கொண்டவன்
இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தில்
தவறவிடுவேனா?

விரல்களின் கிரீடத்தில் வண்ணம் பூசியிருக்கும்
நறுமணத்தில் அறிந்து கொள்வேன்
பிறந்த மழலையின் உள்ளங்கை மணத்தைப் போல்
உன்கைகளின் நறுமணத்தில் அறிந்து கொள்வேன்
வளையல்கள் உரசும் சத்தத்தில் அறிந்து கொள்வேன்
பட்டு தாவணி என் மேனி மறைப்பதில் அறிந்து கொள்வேன்
நின் பேச்சின் இனிமையில் அறிந்து கொள்வேன்
இன்னும் ஆயிரம் விதத்தில் உன்னை அறிந்து கொள்வேன்.
இருந்தும் ஒரு விளையாட்டு..

நான் யார் என்ற உன் கேள்விக்கு
உன் தோழி பெயரை உரைத்தேன்..

காளைக்கு வெட்கம்-4


தலையணை தேவையில்லை
அணைத்துக்கொள்ள
"Teddy Bear" வந்துவிட்டது.
அதுவும் வெட்கப்பட்டு
தெரிந்து கொண்டுள்ளது
நம் ரகசியங்கள்
ஒவ்வொன்றையும்.

Friday, March 18, 2011

காளைக்கு வெட்கம்-3


"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்
தற்சமயம் பிஸி யாக இருப்பதால்
சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்"
அழைப்பு மணியே அறியாத கைபேசி
இந்த குரலை எல்லோருக்கும் அறிமுகப்படுத்துகிறது.
தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்
உன்னிடத்தில் வெட்கத்துடன்!

Thursday, March 17, 2011

காளைக்கு வெட்கம்-2


ஒரு கைபேசி
அதில் ஆயிரம் குறுஞ்செய்தி
அவ்வப்பொழுது
நீ சிணுங்கும் ஒலி
இவை போதும்
என் பொழுதுகள்
அர்த்தமாகிவிடும்
வெட்கத்துடன்!

Wednesday, March 16, 2011

காளைக்கு வெட்கம்-1


கன்னம் சிவந்து
வெட்கப்படுவதர்க்கென்றே
60 பக்க நோட். அதன்
ஒவ்வொரு பக்கத்தின் நடுவிலும்
ஒரு ரோஜா இதழ்.
நீ கொடுத்தவை!

Saturday, March 12, 2011

ஆதலால் தான் சொல்கிறேன்

என் அருமை காதலுக்கு ஒரு கடிதம்.
பார்வை இழந்து
வார்த்தை வராமல்
பாதை தவறி
முடிந்த வரை
என்னை நானே
காயப்படுத்தி
அனைத்து துன்பங்களையும்
அனுபவித்த பின்
உன்னை முற்றிலும் கழற்றி எரிந்து
உரு மாறியிருக்கும்
வைரம் நான்.
என்னுள் மீண்டும் தோன்றி
ஒரு பூகம்பம் தோற்றுவிக்காதே.
ஆதலால் தான் சொல்கிறேன்
நீ இல்லாமல் இழந்ததைக் காட்டிலும்
நீ இருந்து இழந்ததே அதிகம்.
அவை எல்லாவற்றையும்
பட்டியலிட தேவையில்லை
என் காதலே.

Thursday, March 10, 2011

மெல்லச் சாவோம்


கால்கள் வலிக்க நடந்துவிட்டேன்
நா வற்றும் வரை பேசிவிட்டேன்
இமைகள் களைத்துப் போகும் வரை இமைத்துவிட்டேன்
கண்கள் சிவக்கும் வரை தொடர்ந்துவிட்டேன்
உள்ளங்கை வலிக்கும் வரை உன் கைகளை பிடித்துவிட்டேன்
மூச்சிரைக்கும், நுரையீரல் முற்றிலும் சாம்பலாகும்
இருமல் வரும் தெரிந்தும் தொடர்ந்துவந்தேன்
இன்னும் சற்று நேரத்தில்
நீ இறக்கப் போகிறாய்
நானும் ஒரு நாள் இறப்பேன்
நீண்டுகொண்டே இருக்கிறது இந்த பாதை
அடுத்த பீடி, சுருட்டு, வெண்சுருட்டு கிடைக்கும் வரை.

Wednesday, March 9, 2011

ஒரு குடம் கண்ணீர்

பழையது என்று ஒதுக்கி வைத்த பொருட்களில்:

என் வயதொத்த
"தொலைகாட்சி".
மரத்தால் இழைத்த
"பீரோ".
ஓரிருமுறை அணிந்துகொண்ட
"கராத்தே டிரஸ்".
இரும்பிலே வாங்கிய
"Suitcase".
என்னை அமர வைத்து
அப்பா கால்மிதித்த
"சைக்கிள்".
பெரியது என்றாலும்
சத்தம் வரும்
"Wet-Grinder".

இவையுடன் இன்று
இணைந்து கொண்டது
என் "கேமெராவும்".

ஜீவன் இல்லையெனினும் ஜீவித்திருந்தது
இயற்கையுடன் என்னை இணைத்தது
சுற்றுலா என்றதும் பட்டியலில் முதலில் சேர்ந்துகொண்டது
என்னை சில சமயத்தில் அழகாய் காட்டியது
குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக "Smile Please" செய்ய வைத்தது
இன்று இறுதியாய் ஒவ்வொருவர் கண்ணிலும் பல நீர் துளிகள்
வாங்கிக்கொண்டது ஒரு குடம் நிறையும் அளவிற்கு.

Tuesday, March 8, 2011

மழைப்பெண்


ஒரு நங்கை
குடை தனை விரித்து
ஒரு வேங்கை
இரு கைகளை விரித்து
ஒரு மழலை
இருவர்க்கும் மத்தியில்
கப்பல் செய்து
மழையை இரசித்துக்கொண்டிருந்தனர்!

மழை நீர்
துளிகளாய் தொடங்கி பின்பு
அங்காங்கே குளங்களாய் மாறி
பெருக்கெடுத்து ஓடும் நதியென
உருவெடுத்தது!

மழலை கண்களில்
மழை விட ஆரம்பித்தாள்!

குடைக்கு பயந்தோ இல்லை
வேங்கை சீற்றத்திற்கு பயந்தோ
மழை நிற்கவில்லை.
கப்பல் கவிழும் என்றதால் நின்றது!

ஏன்?
மழையும் ஒரு பெண் அன்றோ!

காரணம்-
மென்மைக்கு உவமை பெண்மையன்றோ!

இயற்கை(யாய்)
தாய்க்கு தெரியும்
பிள்ளையின் தவிப்பு!

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!

Monday, March 7, 2011

தங்க்லீஷ்


உயிர்
மெய்
உயிர்மெய்
ஆயுதம்
எதுவும் வரவில்லை!

வல்லினம்
மெல்லினம்
இடையினம்
எதுவும் வரவில்லை!

வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
எதுவும் வரவில்லை!

தொல்காப்பியர்
அகத்தியர்
மொழிக்கென்று தோன்றிய
தமிழ் கடவுள்
எவரும் வரவில்லை!

மொத்தத்தில் தலைப்பை
தவிர வேறெதிலும்
தமிழ் வரவில்லை
வெள்ளிவிழா கொண்டாடிய
ஒரு தமிழ்ப்படத்தில்!

Friday, March 4, 2011

தடை உத்தரவு


கால்கள் நடனமிட பார்த்திருக்கிறேன்
அது ஏன் என் இமைகள் நடனமிடுகிறது?

அக்னிவெயிலில் வியர்வையை பார்த்திருக்கிறேன்
அது ஏன் இந்த நடுங்கும் குளிரில் வியர்க்கிறது?

நூறு பேர்முன் பேசியிருக்கிறேன்
பக்கத்தில் யாரும் இல்லை
அது ஏன் என் இதயம் இப்படி படபடக்கிறது?

எத்தனை முறை இதை செய்திருக்கிறேன்
அது ஏன் எனக்கு இன்று இப்படி நடுங்குகிறது?

விரல்களால் வீணை மீட்டியிருக்கிறேன்
நான்கு முறை அல்லது அதற்கும் மேலாக
அழுத்த வேண்டும்
அது ஏன் என் விரல்கள்
ஒரு நிலைபாடில்லாமல் உதறுகிறது?

காக்க காக்க கனகவேல் காக்க
ஐயோ மற்றவையெல்லாம் மறந்துவிட்டதே முருகா?

இருமுறை தவறறிளைத்துவிட்டேன் கடைசி முயற்சி
அய்யய்யோ வடை (பணம்) போச்சே!!

கடவுச்சொல்லை முற்றிலும் மறந்துவிட்டேன்
தடை செய்து விட்டது தானியங்கி!!