Saturday, August 29, 2015

யாவருக்கும் மத்தியில்

போலி புன்னகை
மரபைமறந்த விருந்தோம்பல்
அவசர நலம்விசாரிப்பு
அர்த்தமற்ற பேச்சு
இவை அனைத்திருக்கும் மத்தியில்
நண்பனின்றி தனித்துவாழ்....


கசிந்து உருகும் காதல் தொலைத்து
கணினி காண்பித்த காதல் வளர்த்து
தள்ளாடும் மனதும்
நிதானம் இழந்த பார்வையிலும்
நெசமற்ற நெஞ்சத்தினால்
காதலித்து கெட்டுப்போ....

சாபமிடும் நண்பன்
சண்டைபோடும் தம்பி
சத்தம்போடும் அப்பா
சந்தேகப்படும் அன்னை
யாவருக்கும் மத்தியில்
தினம் தினம் செத்துப்பிழை ...

Tuesday, July 28, 2015

சலாம் திரு.கலாம்

இளைஞா எழுவாய் இமயம் தொடுவாயென
கனவை செதுக்கிய சிற்பியும் நீயே
வலியா பசியா யாவும் மறந்து
ஊக்கம் தந்த விதையும் நீயே

தமிழா மரபா கேள்விகள் தவிர்த்து
அறிவை பகிர்ந்த அறிஞன் நீயே
யாதும் ஊரே என உலகம் பார்க்கையில்
உறக்க சொன்ன முதல் குடிமகன் நீயே

கனவை காண் கேள்விகள் கேள்
செயலை செய் எதுவும் முடியும்
இதுவே மந்திரம் என்று உணர்த்திய
குருவும் நீயே.

ஒரு நாள் விடியும் கனவும் கூடும்
பாரதம் வையத் தலைமை கொண்டோம்
என்று முழங்கும் கீதம் ஒன்று
விண்ணில் வந்து உன்பாதம் தொடும்.

இறவா புகழும் இறைவன் வரமும்
ஒன்றாய் பெற்ற திரு.கலாமிற்கு ஒரு சலாம் 

Wednesday, June 25, 2014

மென்பொறியாளன்



ஐந்தாவது  மாடி நான்கு வீடுகள்
அதில் கதவு எண் 4A
மூன்று அறை ...
முற்றம்?? அகராதியிலே தேட வேண்டும்
வாஸ்து பார்த்து கட்டியதாய் நினைவு
வஸ்திரங்கள் அங்காங்கே காய வைத்திருப்போம்
காற்று புகும் அறைகள்
வெப்ப கதிர் வியர்வை தரும்
கடற்கறை காண வாய்ப்பில்லை
மழை வந்தால்........ இரசிப்போம்
மற்றபடி சுகம் துக்கம் கலந்தே இருக்கும்
சமையலறை தவிர்த்து
மற்றவையில் பொருட்கள் கலைந்தே கிடக்கும்
பள்ளியறையில் பல் இளித்துக் கொண்டிருக்கும் ... China பொம்மை
வலதுகரம் கைபேசி அலங்கரித்தது
தொலைக்காட்சி தானியங்கி இடக்கையில் தஞ்சம் புகுந்தது
மடியிலே கணினி
எதிரிலே ஜனனி
ஸ்பரிசம் பட்டும் பஞ்சனை நனைந்தும்
பரிதவித்து பார்வை நிலைகொள்ளாமல் நான்
பாவம் என்னதான் செய்வாள்
என் பிஞ்சு குழந்தை....

Friday, July 26, 2013

கண்ட நாள் முதல்


உண்ண மறந்து உறக்கம் போய்
கல்வியிலே பெற்ற ஞானம் போய்
வேளையிலே சேர்த்த செல்வம் போய்
கருவறையில் இருந்து குதித்தவன் போல்
ஏதுமற்று நின்றேன்
உன்னை கண்ட நாள் முதலாய்...

Sunday, June 30, 2013

என்னை மீட்டுயெடு...

Taken By: Ashok
Flickr Profile: http://www.flickr.com/people/aa_photographe/
Flickr Photo: http://www.flickr.com/photos/aa_photographe/7858540852/





























சாலையோர தேநீர் சுவைத்து குடித்து
இறுக்கி அணைத்துக்கொண்ட
நெடுதூர பயணத்தின் நடுவினிலே
கருமேகங்கள் சூழ்ந்து
அடாது பெய்கிறது பேய்மழை...

மரங்கள் சூழ்ந்த பூங்கா
மலர்கள் நிறைந்த புல்வெழியின் நடுவினிலே
நீயும் நானும்
விரல்களால் கோலமிடுகையில்
தட தடவென  பெய்கிறது மழை...

அஸ்தமன வேளையிலே
கடற்கரைதனில் கால்கள் நெனைக்கிறோம்
மணல் மேட்டில் அமர்ந்து
மாறி மாறி உலரிக்கொண்டிருந்த தருணம்
பட படவென பெய்கிறது மழை...

நிலா உலாவும் வானம்
யாருமற்ற மொட்டைமாடி
ஒரே போர்வைக்குள் நாமிருவர்
கதைகள் கதைத்துக்கொண்டிருந்த தருணம்
சட சடவென பெய்கிறது மழை...

உன் நினைவுகளில் மூழ்கிய என்னை
அடியோடு கரைக்க மழை
போராடிக் கொண்டிருக்கிறது.

தொலைபேசி உரையாடலோ அல்லது
குறுஞ்செய்தியோ,  மின்னஞ்சலோ
ஏதேனும் ஒன்றை அனுப்பி
என்னை மீட்டுயெடு தங்கமே...

Thursday, June 20, 2013

யாதுமாகிறாய்..

அனந்த விகடனில்  30-05-2012 வெளியான  சிறுகதை "விரும்பிக் கேட்டவள்"  கதைக்கான  ஓவியம்.
வரைந்தவர். திரு. இளையராஜா.
தொலையாமல் இருக்க புகைப்படம் பிடித்தவர்
நண்பர்: அருண்  வேலுசாமி 


நெற்றி சுரிக்கையில் சந்தன பிறை விழுந்திடுமோ 
கண் சிமிட்டும் பேரழகில் தாளங்கள் தப்பிடுமோ
தவழ்ந்து வரும் நடையினில்  கப்பல் கவிழ்ந்திடுமோ - இனி
நீ விழிக்கும் நேரத்தில் வெண்ணிலா உதித்திடுமோ.

சின்னச் சின்ன பருக்களினால் உன் கன்னம் சிவந்திடுமோ
நிலவினிலே கரையென்று உலகமே பாடிடுமோ
உன் ரீங்காரம் கேட்ட பின் குயில் பாட்டை நிறுத்திடுமோ
உன் அழகை ஆராய்வதில் என் பொழுதும் கரைந்திடுமோ

செல்ல சிரிப்பலையில் தொடர்ந்தெழும் சிணுங்கல்களில்
வண்ண வளையல்கள் தாளமிட்டு விளையாடும்
காதோர தோடு கன்னமுரசி விளையாடும்
விரல்களில் மோதிரம் தங்காமல் விழுந்தெழும்.

கூந்தலிலே பூ முடித்து புடவை கட்டும் பேரழகி
நித்தம் நித்தம் என்னை துறத்தும் செய்திதான் என்னவோ
அகப்பட்ட தூண்டிலில் மீனின் நிலைமை என்னவோ
அகம் தொலைத்த என் நிலைமை அதுபோலே தானவோ.

எங்கெங்கோ தேடிய பின் எதிரிலே தெரிகிறாய்
எக்காரணமும் இல்லாமல் தங்கச் சங்கிலியை கடிக்கிறாய்
யாருமற்ற நேரத்திலே அருகிலே நிற்கிறாய்
ஏதுமற்று தவிக்கையில் எனக்கு யாதுமாகிறாய்.

Tuesday, January 29, 2013

விற்பனைக்கு

கம்பிகள் இல்லா ஜன்னல்
கதுவுகள் இல்லா அறைகள்
கூரைகள் இல்லா வீடுகள்
மனிதர்கள் இல்லா
இக்குடியிருப்புக்கு பெயர்
மிருகக்காட்சி நகர்.

இவை மட்டுமா,
மரங்கள் இல்லா
தண்ணீர் இல்லா
மொத்தத்தில் பசுமை இல்லா
ஒரு குடியிருப்பு இந்த
மிருகக்காட்சி நகர்.

ஆம்.

விளம்பரப்படுத்துங்கள் விலங்குகளுக்கு.
முதல் பகுதி தற்போது விற்பனையில்.


இவை
நீலகிரி மலைச்சரிவில்
மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு
மிக அருகில்.


பிற பகுதிகள் அவ்வப்பொழுது
விளம்பரம் செய்யப்படும்.

இந்த மனைகள்
காடுகளை தொலைத்து
மனிதர்களை துன்புறுத்தும்
விலங்குகளுக்கு மட்டும்.

Wednesday, December 19, 2012

டூயட்

முன்குறிப்பு:
இதற்கு தகுந்த ஓவியமோ புகைப்படமோ இன்னும் அமையவில்லை :) 

ஆண்:
ஆவணி மாச சாரல் காற்றே என்
அத்தை பெத்த சின்ன முத்தே
ஆளுக்கொரு தூணா சாஞ்சு நிக்கவா
ஆளில்லா வீட்டுக்கு உன்னை வரச் சொன்னேன்.
பெண்:
சித்திரை மாச தங்கக்கட்டி என்
மாமன் பெத்த சிங்கக் குட்டி
தூணப் புடிச்சு சாஞ்சு நின்னவ
தானா வந்தா உன்னை கட்டிப்புடிப்பேன்.
ஆண்:
மதியம் செஞ்ச மீன் குழம்பு ருசிக்கவா
அந்தி சாஞ்சு அரை மணி கழிச்சு
திண்ணையில குத்தவெச்ச.

பெண்:
மதியம் செஞ்ச மீன் குழம்பு ருசிச்சவ
ஊட்டி விடச் சொன்னா
ஓடியா போயிருப்பேன்.

ஆண்:
பரண்மேல் கிடந்த படுக்கையை கடத்தி
தனியா படுத்து உறங்கவா
இத்தனை நாள் தவம் கிடந்தேன்.

பெண்:
படுக்கையை கடத்தி தனியா படுத்து கிடந்தே
மார்மீது சாயச் சொன்னா
மாட்டேன்னா சொல்லியிருப்பேன்.

ஆண்:
கட்டுக்கோப்பா மாமன்  கிடக்க
கழட்டிவிட்ட கண்ணுக்குட்டி போல
கண்டுங்காணாம திரியரையே
பெண்:
ஆறேழு வருஷம் முன்ன நடந்த
ஓடிபுடிச்சு விளையாண்ட கதைய
இப்படி செஞ்சும் உனக்கு புரியலையே.

ஆண்:
பாதி சாமம் ஆன பின்னே
ஊர் உறங்கி போன பின்னே
பாவிப் பையன் என்னை பாத்து
கைகொட்டி சிரிக்கிறியே
பெண்:
மீதி சாமம் உறங்காம
உன்யேவலுக்கு காத்துக் கிடக்கேன்
உரக்கச் சிரித்தும் உனக்கு உரைக்கலையே
செவத்த தோலு மச்சானே.

ஆண்:
ஏண்டி என்னை நோகடிச்சு
ஒரு இராத்திரி வீணடிச்சு
எந்த மலையை கரைக்கப் போற
எப்போ வந்து என்மேல சாயப் போற.
பெண்:
இந்த சொல்லுக்கே ஒரு
இராத்திரி கடத்திட்டியே
மொத்த சொல்லையும் கொட்டிடாதே
மத்த இராத்திரி வீணாயிடும்.

Tuesday, December 18, 2012

தாய்காலம்


நிலாச்சோறு ஊட்டி விட்டவே
இப்போ நிலவ பார்த்து பேசி நிக்கறா
நித்திரை இல்லாம வேலை செஞ்சவே
சித்திரையில் முத்து  குளிச்சா.

எத்தனை நாள் தவம் கிடந்தாலோ
சிறு மயக்கத்தில கிழே விழுந்தா
தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டேன் இவள
தனிய விட்டு தவிச்சு கிடந்தேன்.


ஊரறிய வெறப்பா நின்னேன்
இப்போ உள்ளுற நடுங்கி அலைஞ்சேன்
துணிவே துணையா இருந்தேன்
இப்போ தூணப் புடிச்சு சாஞ்சு நின்னேன்.

மனமே கோயில் என்றிருந்தேன்
இப்போ மரத்தடி விநாயகர் தினம்தொழுதேன்.
பணிவே பழக்கமா வச்சிருந்தேன்
இப்போ பலஊரு கேக்க சிரிச்சு திரிஞ்சேன்.

பல்லாங்குழி வாங்கி வந்தேன்
பரமபதம் வாங்கி வந்தேன்
பலகாரம் வாங்கி வந்தேன் கூடவே
தொட்டில் ஒன்னு செய்யச் சொன்னேன்.

சுவையா பேசும் நாள் வருதே
சுகமா திரியும் நாள் வருதே
கள்ளி உன்னை சிரிக்க வெக்க
சொந்தம் கூடும் நாள் வருதே.

விதவிதமா சீனி போட்டு
பல பலகாரம் ருசிச்சதுல
உன்  உடல் கூடிரிச்சே
என்பொறுப்பு கூடிரிச்சே

செக்க செவக்கும் மருதாணி இலையிலே
வண்ணவண்ணமா சித்திரம் வரைஞ்சு
உன் அழகு கூடிரிச்சே உன்கூடவே
என் உயிர் சேந்துருச்சே.


உன் அழகு கூடிரிச்சே உன்கூடவே
என் உயிர் சேந்துருச்சே.





Tuesday, November 27, 2012

நீயற்ற பொழுதில்



நெடுதூரம் நடந்து திரும்பி பார்க்கையில்:

சட்டென்று மழை.
துள்ளி குதித்தேன்,
ஓ வென்று அழுதேன்,
வேகமாய் ஓடி
கால்கள் இழைத்தேன்,
இளைப்பாற அமர்ந்ததும்
சலனம் கொண்டது மனம்.
நெஞ்சம் இல்லையெனினும் ஈரம் இருக்கிறது  - மாற்றான்.


சேமிப்பை தூசு தட்டினால்:

கொஞ்சம் சில்லறை,
என் குறும்புகள்,
சொந்தம், சுகம், துக்கம்,
தோழமையும்,
உன் புகைப்படம்,
முடிவில் நீ தந்த முத்தம்.
கண்கள் போனபின்பும் காயம் ஆறவில்லை - தாண்டவம்.

எது தொடங்கினேனோ அது
உன்னிடமிருந்தே தொடங்கப்பட்டது.
எதை செய்கிறேனோ அதை
நீயே வழி நடத்துகிறாய்.
நீயில்லை என்பது பொய்.
நீயே எல்லாம் என்பது மாயை.
நான் இருந்தும் இல்லாதிருக்கிறேன் என்பதே மெய் - மதுபானக்கடை.

படிப்பதை நிறுத்த வில்லை நீ
கிறுக்கல்களை தொடர்கிறேன் நான்
முகம் பார்த்து சிரித்து பின்னர்
புரம் பேசி திரிபவர்களுக்கு
காத்திருக்கிறது அவர் அவர்களுக்கான - Pizza.