Saturday, February 26, 2011

உற்ற தோழன்


அக்கம் பக்கம் பாராமல்
ஆணியடித்தார் போல் ஒருவன்

தலையில் இடியே விழுந்தாலும்
என்னாச்சு என்று கேட்கக்கூடிய ஒருவன்

புரிகிறதோ இல்லையோ அது A.R.Rahman
பாட்டு என்று கதறும் இளம்பெண்கள்

யான் பெற்ற இன்பம் பெருக
என்பட்க்கத்திருக்கை நண்பரும்
என்று பங்கிட்டு கொள்ளும் இருவர்

எம்.எஸ்.வி, இளையராஜவில் ஆரம்பித்து இன்று
விதவிதமாக அவர் அவர் விருப்பமாக
எதோ ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்

பணிக்கு செல்லும் சமயத்தில்
செவி கேளாதோர் பள்ளியில்
சேர்ந்து விட்டோமோ என்றொரு பயம்
எல்லோர் காதிலும் ஒரு கருவி i-pod

ஒருவேலை இது இன்னொரு
அடையாள அட்டை
என்று கூட தோன்றும்

இதை மாட்டிகொண்டால்தான் வேலையே
ஓடும் என்று அதன் பெருமை
உணர்த்தும் சிலர்

தாமதமாக உணர்ந்துகொண்டேன்
எனது வேலைக்கு இது
ஒரு Pre-requisite என்று
சில சமயம் பிடித்த பாடலில்
மனம் கரைந்து விடும்
வேலையும் முடிந்து விடும்
பல சமயம் பிடிக்காத வார்த்தைகளை
வடிகட்டும் அதனாலேயே
வேலையும் முடிந்து விடும்.

Wednesday, February 23, 2011

வாக்களித்திருந்தேன்

சின்னதொரு கதை சொல்கிறேன்:


ஆயர்கலை அறுபத்துனான்கை
கற்பது இருக்கட்டும்
சமையர்கலையை உன்னிடத்தில்
கற்பதாக ஒரு நாள்
வாக்களித்திருந்தேன்!

எப்பாடுப்பட்டாலும் ஞாயிற்றுகிழமையில்
சமையல் என்னுடையதென்று
மற்றொரு நாள்
வாக்களித்திருந்தேன்!

நீ களைத்துப்போயிருந்தால்
காபி டீ வைத்துதருவதாய்
பிறிதொரு நாள்
வாக்களித்திருந்தேன்!

வெந்நீர் மட்டுமே வைக்கத்தெரிந்திருந்தேன்
மற்றவையெல்லாம் உன்னிடத்தில்
கற்றுக்கொள்வதாய்
எனது மீது ஆணையாக
வாக்களித்திருந்தேன்!

புதினாவோ மல்லியோ ஏதோ
ஒன்றில் சட்னி அறைத்து
அரிசி மாவில் இட்லியோ தோசையோ
ஏதோ ஒன்றை சமைத்து
வெள்ளை இரவையில் கேசரி செய்து
ஒரு சிறு விருந்து அளிப்பதாய்
வாக்களித்திருந்தேன்!

நியூயார்க் நகரில் தனிமையில்
பெங்களுரு கடையடைப்பின் அதிர்ச்சியில்
சென்னையில் கொளுத்தும் வெயிலில்
மும்பையில் வயிற்று வழியில்
கோவையில் பெற்றோர் திருமணத்திற்கு
சென்றிருந்த சமையத்தில்
பசி பலவிதமாய் உருவெடுத்து
எல்லா வாக்குகளையும்
செல்லாத வாக்காய்
மாற்றிவிட்டது!

பன்ச்:
தனித்திருந்தேன்
உன் நினைவு வந்தது
விழித்திருந்தேன்
கவிதை வந்தது
பசித்திருந்தேன்
கவிதை உன்நினைவு
இவையோடு சேர்ந்து
பத்தும் பறந்துவிட்டது!!

Tuesday, February 22, 2011

அனுமனில்லை















நேர்கொண்ட
பார்வை
எதிர்கொள்ள ஆயுதமில்லை

சீர்கொண்ட நடை
நினைத்துநினைத்து உறக்கமில்லை

நேசம்மிகு புன்னகை
சேமித்து வைக்க இடமில்லை

ஆழம்மிகுந்த வார்த்தை
அர்த்தம்தெரியும் ஞானமில்லை

அழகாய் நீயுடுத்தும் ஆடை
நூலாக அதில்நானில்லை

அடர்த்தியான கேசம்
துயில்கொள்ளும் எண்ணமில்லை

செழிப்புமிக்க தேகம்
அபகரிக்கும் ஆசையில்லை

பொய்யான கோபம்
புரிந்துகொள்ளும் மனமில்லை

வில்லென புருவம்
அம்பெய்திட நான்ராமனில்லை

தற்போது
எந்த தேசத்தில் நீ
அறிந்து சொல்ல அனுமனில்லை!

Monday, February 21, 2011

நின்னையே




தூறல் விழ காத்திருந்தேன்
அடைமழையாய்
நீ வந்தாய்

வார்த்தை கிடைக்க தவமிருந்தேன்
கவிதையாய்
நீ வந்தாய்

மழலை காண காத்திருந்தேன்
கார்மேக கண்ணனாய்
நீ வந்தாய்

நிழல் தேடி அலைந்துவந்தேன்
அந்திப்பொழுதாய்
நீ வந்தாய்

கண்மூடி தவமிருந்தேன்
கடவுளாய்
நீ வந்தாய்

எதையோ நினைத்தபொழுது
எல்லாமாய்
நீ வந்தாய்

இன்று உன்னையே
நினைக்கிறேன்
கனவிலும் வரமருக்கிறாயே!!

Sunday, February 20, 2011

தனியாய்


ஓடி விளையாடி
ஊரார் முன்
கூடி கதை பேசி
நாட்கள் நானூறு
ஆனதடி செல்லமே!

நின் நினைவினை
சுமந்தபடி நீண்டதொரு
பயணம் சென்று
நாட்கள் நானூறு
ஆனதடி செல்லமே!

பிடி பிடியென்று
நீ பொடிவைத்து
விளையாடி
நாட்கள் நானூறு
ஆனதடி செல்லமே!

போடி போடியென்று
நான் செல்லக்
கோபங்கள் சுமந்து
நாட்கள் நானூறு
ஆனதடி செல்லமே!

தேடி அலைந்து
பாடித் திரிந்து
ஆடி களைத்து
நாடி அடங்கியதடி
என் செல்லமே!

தாயாக தாய்வீடு
சென்று நம் பிள்ளையை
ஈன்று இன்றோடு
நாட்கள் நானூறு
ஆனதடி செல்லமே!

தனியாய் ஒருபிள்ளை
உன்னை பிரிந்திருக்கையில்
விழியோரமாய் நீர்
வழியுதடி
என் செல்லமே!

சீக்கிரம் வந்து விடடி!
என் செல்லமே!
சீக்கிரம் வந்து விடடி!

கண்ட-திருக்கோலம்


கல்லூரி வகுப்பறையில் கிறுக்கியவை
தேர்வறையில் வினா தெரியாமல் கிறுக்கியவை
என் தேவதை(கள்) பாடும் பொருளாய்
நினைத்து கிறுக்கியவை
அன்று வந்த காதல் படங்களை
நினைத்து கிறுக்கியவை
இவையெதையும் சேகரித்து வைக்கவில்லை
ஆனால்
நண்பன் அதை மேடையேற்றினான்
ஊர் அறிய அதை மேடையேற்றினான்
விகடனில் அவை பிரசுரிக்கப்படுகின்றன
பின்பு புத்தகமாய்
கல்லூரி பருவத்தின்
கிறுக்கல்கள் மேடையேறும் நாள்
இரண்டு நிமிடங்களில் முதல் பிரதியை
பெற வருகிறார்......

சட்டேன்று கனவு கலைந்து
என்னைநோக்கி வினவுகிறான்
காலையில் கண்ட கனவு பலிக்குமா?
இல்லை நாட்கள் பின்னோக்கி நகர்ந்து
நம் கல்லூரி பருவத்தை அடையுமா?

Friday, February 18, 2011

பார்த்திபன்-கனவு


தனிமை வேண்டும்
கானகம் சென்றோ
இல்லை
கடல் நடுவினிலோ.

நனைய வேண்டும்
தினம் செல்லும் பாதையிலோ
இல்லை
வீட்டின் முற்றத்திலோ.

இவை சாத்தியமோ
இல்லையோ
எனது பார்வையில்
நீ வேண்டும்
தூரத்திலோ அருகிலோ
எதிரிலோ இல்லை
எனது மடியிலோ.

கள்வன்-To-காதலன்


















எழுத்துகளற்ற
குறுஞ்செய்திகளும்
இமைக்காத பார்வைகளும்
உருண்டோட காத்திருக்கும்
கண்ணீர் துளிகளும்
என்னை விடாமல்
பற்றிக்கொண்டிருக்கும்
உனது கைகளும்
உதட்டோரத்தில் பூத்திருக்கும்
மென்புன்னகையும்
இன்னும் இன்னும்
உனது விளையாட்டுகளும்
அப்பப்பா..
இவற்றுள் எவற்றை
ரசிப்பது என்று தவிக்கையில்
சட்டேன்று தோள் சாய்ந்து கொள்கிறாய்.

கள்வனாக ரசித்துக் கொண்டிருந்தவனை
காதலனாக ரசிக்க வைத்துவிட்டாய்!

Tuesday, February 15, 2011

படாதபாடு

















ஒரு
அழுகுரல் கேட்கும்பொழுது,
ஒரு சிரிப்பொலி கேட்கும்பொழுது,
தூரத்தில் எவரேனும் அழைக்கும்பொழுது ,
இல்லை ஒரு பாடல் கேட்கும்பொழுது,
என்னவென்று தோன்றுமோ
செவித்திறன் அற்றவர்க்கு!!

வானவில் கண்டிரா?
என் ஆடையின் நிறமென்ன?
புதிய திரைப்படம் கண்டிரா?
வெளிச்சம் அதிகமாய் இருக்கிறதா?
இந்த கேள்விகள் கேட்கும்பொழுது
என்னவென்று தோன்றுமோ
பார்வையற்றவருக்கு?

இவைதான் என் நிலைப்பாடும்
நீ இவ்வாறு கேட்கும்பொழுது
"உறக்கத்தில் என்னை நினைத்தாயா?"

Monday, February 14, 2011

இலக்கணம்















ஓர் எழுத்து எனப்படுவது
யாதெனில்...
உனது நெற்றிபொட்டின் நடுவில் ஒரு வட்டம்
உனது உதடுகளுக்கு கீழ் உள்ள ஒரு மச்சம்
உனது இரு புருவத்தின் மத்தியில் ஒரு புள்ளி
அல்லது மூக்குத்தியின் ஒரு முத்து.

ஓர் சொல் எனப்படுவது
யாதெனில்...
சற்று கடினம் தான்.
உனது கை விரல்கள்
அல்லது கால் விரல்கள்

ஓர் வாக்கியம் எனப்படுவது
யாதெனில்...
ம்..
உனது மொத்த உருவம்.

ஓர் மொழி எனப்படுவது
யாதெனில்...
எப்படிச் சொல்ல..
ஓர் எழுத்தென்றால் நீ.
இரண்டெழுத்தென்றால் நாம்..
மூனெழுத்தென்தென்றால் நம் காதல்!!!

Sunday, February 13, 2011

சாத்தியமா















அலைகள்
உரசி
கரைகள் அழுவதுண்டா?
முகில்கள் மோதி
மலைகள் உடைவதுண்டா ?
தேனீக்கள் கடித்து
பூக்கள் அழுவதுண்டா?
அன்பே இல்லாத
உயிரினம்தான் உண்டா?

இவை புரிந்து கொள்ள கடினமென்றால்
தூய தமிழில் புரிய வைக்க முயற்சிக்கிறேன்.

சேதாரம் இல்லாத
தங்கச்சங்கிலி உண்டா?
அன்பளிப்பு வாங்காத
அட்மிசன் தான் உண்டா?
நாலுபேர் வரிசை இல்லாத
ATM தான் உண்டா?
திங்கட்கிழமை வேலை செய்யும்
மென்பொருள் வல்லுநர் உண்டா?

இவையேதும் சாத்தியம்
இல்லையென்றால்

என் முத்தங்கள் சுவைத்து
உனக்கு காய்ச்சல் வர வாய்ப்பேயில்லை!!

Friday, February 11, 2011

நம்-பரிணாமம்















பிள்ளைப்
பருவத்துப் "பிடிக்கும்"
இளம் வயது "கோபம்"
பருவ வயது "மோகம்"
கொஞ்சம் வளர்ந்த பின்
வரும் "ஊடல்"
முதுமையின் தொடக்கத்தில்
எழும் "கூச்சல்"
முதுமையை தொட்டதும்
ஒருவிதமான "தேடல்"
இது எல்லாம் கலந்த
ஒரு பரிணாம வளர்ச்சிதான்
நம் மனதில் தோன்றிய
"காதல்"!!!

Thursday, February 10, 2011

காதல்-சூடி














அச்சம்
தவிர் - தவிர்த்துவிட்டேன்
சாவதற்கு அஞ்சேல் - அஞ்சமாட்டேன்
செய்வது துணிந்து செய் - செய்கிறேன்
துன்பம் மறந்திடு - மறக்கிறேன்
தோல்வியில் கலங்கேல் - கலங்கமாட்டேன்
நேர்படப் பேசு - பேசுகிறேன்
மானம் போற்று - போற்றுகிறேன்
ரௌத்திரம் பழகு - பழகுகிறேன்

புதியன விரும்பு - நிச்சயமாக மாட்டேன்.
தெய்வம் நீ என்றுணர் - தெய்வம் நீயென்று உணர்ந்தேன்.

Tuesday, February 1, 2011

பூங்காவில்











பூங்காவில்

நான் பார்வையற்றவனாய்
இருக்க விரும்பவில்லை.
ஒரு ஜோடி சிரித்துக்கொண்டு
ஒரு ஜோடி பேசிக்கொண்டு
மற்றும் இருவரில்
ஒருவர் அழுதுகொண்டு.
இன்னும் பலரோ பரந்தாமன் போல்.
சண்டையிட கைகள் நீண்டு
இருவேறு துருவமாய்.
பின்னர் சமதானாமாய் இதழ்கள் குவிந்து
ஒருவராய்.


பார்க்கசென்றதென்னவோ பூங்காவை
பார்த்து ரசித்ததேன்னவோ காதலை.
ஏனெனின்
முகங்கள் வேறுபட்டாலும்
நீக்கமற நாம் நிறைந்திருப்பதாய் உணர்வு!!