Wednesday, July 25, 2012

ஒரு நாள் நிச்சயம் நடக்கும்

லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
விமான பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்
மருத்துவர்கள் செவிலியர்கள் வேலைநிறுத்தம்
போனஸ் கேட்டு பஞ்சாலை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
பல்வேறு இடத்தில், பல்வேறு தொழிலாளர்கள்
வேலை நிறுத்தத்தில் ஒன்றுபடுகிறார்கள்
என்னை போன்ற மென்பொருள் வல்லுனர்களை தவிர.
So Called Software Engineers


Treat (Party) - இந்த ஒன்றை தவிர
நான் வேறு எதிலும் கண்டதில்லை
எம் மென்பொருள் வல்லுனர்களின் ஒற்றுமையை.

வெள்ளை அணுக்களை (எதிர்ப்பு சக்தியை) முற்றிலும் தொலைத்துவிட்டு
மனதிற்கு முற்றிலும் முகமுடியிட்டு
அரை நிமிடத்திற்கும் குறைவாய் அழுதுவிட்டு (நடித்துவிட்டு)
காலியான இருக்கைக்கு நங்கூரமிட்டு
நம் வேலைகளை (SMART WORK) விளையாடுகிறோம்.
வேலை நிறுத்தம் என்பது
வேலையிலிருந்து நீக்கம் என்றே அர்த்தம்.

இதை நினைக்கையில் ஒரு ஈழத்துக் கவிதை "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்திலிருந்து நினைவிற்கு வருகிறது..

.......தாழ்ந்த புருவங்கள் ஒரு நாள் நிமிரும்..
கவிழ்ந்த இமைகள் ஒரு நாள் உயரும்...
இறுகிய உதடுகள் ஒரு நாள் துடிதுடிக்கும்...
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்...
அதுவரை நீங்கள் எங்களை ஆளுக...
அது வரை உங்கள் வல்லம் ஓங்குக... 

Monday, July 9, 2012

திரு. ஜாதவ் பயெங்

எனது வழக்கமான கிறுக்கல்களில் இருந்து மாறுபட்டு
ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பொருட்டு


இந்த ஒரு செய்தியை எழுத தோன்றியது.

உலகில், நம் நாட்டில், ஊரில், தெருவில் எத்தனையோ பெரியவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவரைபற்றி சிறு துளி அளவில் அறிய நேர்ந்ததால் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்  உங்கள் பார்வைக்கு:


இவரை பற்றி:


ஒரு மாதத்திற்கு முன்  "புதிய தலைமுறை" இதழில் படிக்க நேர்ந்தேன்.
ஒரு வாரத்திற்கு முன் "தினமணி" நாளிதழில் படிக்க நேர்ந்தேன்.

சுருக்கமாக:
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு. ஜாதவ் பயெங் கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!


தமிழில் :
ஆங்கிலத்தில் :