தொட்டுவிட்டு நான் தொலைவதை இரசித்த முகம்
முத்தமிட்டு நான் மலர்வதை இரசித்த முகம்
மறைந்துகொண்டு நான் மன்றாடுவதை இரசித்த முகம்
மழைக்காலம் வந்தால் மட்டும்
மனதில் மின்னல் போல் வருவதென்னவோ?
நீ எண்ணும் காதல் காவியம்
நான் பாடும் தேவ கானம்
நம்மை சேர்க்கும் ஒரு பூவாசம் இதையெண்ணி
குளிர் தென்றல் அடித்தது போல்
மழைக்காலம் வந்தால் மட்டும்
உடல் சிலிர்ப்பதேன்னவோ?
சகியே நீ சட சடவென்று பொழிவதும் உண்டு
ரதியே நீ தட தடவென்று வெடிப்பதும் உண்டு
சொட்டு சொட்டாய் சில பொழுது சிரிப்பதுண்டு
மழைக்காலம் வந்தால் மட்டும்
மாமல்லபுறத்து சிற்பம் ஆவதேன்னவோ?
சிதறாமல் கையளவு அள்ளியெடுத்த அமுதம்
ஒரு நாள் முழுதும் இமைக்காமல் உதித்த கனவு
இதுபோல இன்னும் நூறு நினைவு
மழைக்காலம் வந்தால் மட்டும்
என்னுள் விடிவெள்ளி போல் நீ முளைப்பதேன்னவோ?
Tuesday, May 31, 2011
மழைக்காலம்
Labels:
காதல்,
காவியம்,
படைப்பு,
மழை,
மழைக்காலம்,
மித்ரன்,
விடிவெள்ளி
Sunday, May 15, 2011
பதினாறும்
வெள்ளை நிறத்தில் ஒரு குட்டி
கருஞ் சாந்து நிறத்தில் ஒரு குட்டி
சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி
சுருள் சுருள் முடியாய் ஒரு குட்டி
கன்னங்கள் உப்பியது போன்று ஒரு குட்டி
கையில் வாள் பிடித்து எப்பொழுதும்
போர் புரியும் ஒரு குட்டி
தூக்கத்திலே மேல் ஏறி விளையாடும் ஒரு குட்டி
அமுதுண்ண அழைக்கையிலே ஆர்ப்பரிக்கும் ஒரு குட்டி
எல்லோர் அமுதையும் அமைதியாய் உண்ணும் ஒரு குட்டி
ஓயாது அழுது எல்லோர்
அனுதாபம் பெரும் ஒரு குட்டி
ஆட்டின் வாலை பிடித்துக்கொண்டு
தெருவிலே ஓடும் ஒரு குட்டி
கண்டிக்கும் சமையம் சிரிக்கும்
முகம் போன்று ஒரு குட்டி
கையில் எடுத்து விளையாடும் பொழுது
கன்னத்தில் அடிப்பது போன்று ஒரு குட்டி
எண்ணி எண்ணி இன்புற்றிருக்கும்
இவ்வேளையில்
இவர்கள் யாவரையும்
பெற்று தருவாளோ
என் ஸ்ரீ வரலக்ஷ்மி!
புது வரவு
பேசி சிரித்து பழகி
பகிர்ந்து உண்டு
பல பேர் கதை உரைத்து
பொழுது போவது
அறியாத
ஒரு நட்பு
புது வரவு வரும் வரையில்தான்.
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
பகிர்ந்து உண்டு
பல பேர் கதை உரைத்து
பொழுது போவது
அறியாத
ஒரு நட்பு
புது வரவு வரும் வரையில்தான்.
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
Subscribe to:
Posts (Atom)
