கால்கள் களைக்க ஓடியாடி
கைகள் களைக்க ஆடிபாடி
உதடுகள் சிரித்து உறவாடி
கண்கள் சிவக்க கோபமாகி
பின் சாந்தமாகி, மௌனமாகி,
ஒதுங்க இடமில்லாமல்,
உறங்க வழியில்லாமல்
நகர்வலம் வந்தேன்.
கோவில் சென்றேன்; அர்ச்சகர் துறத்தினார்;
மாளிகை சென்றேன்; மன்னர் துறத்தினார்;
அடுக்குமாடி வீடுகளுக்கு சென்றேன்; காவலாளி துறத்தினார்;
கிராமத்தில் மச்சு வீடுகள் துறத்தின.
ஆறு கால பூஜைகள் உண்டு
அபிசேக அலங்காரம் உண்டு
காணிக்கை பல வடிவில் உண்டு எனக்கு.
என்ன இருந்து என்ன பயன்?
உறங்க திண்ணை இல்லையே!!
Thursday, May 27, 2010
Saturday, May 15, 2010
நினைவுநாள்
Monday, May 10, 2010
அணிகலன்
அணியாத வளையல்கள்
உபயோகிக்காத காலணிகள்
அடுக்கி வைத்திருக்கும் உடைகள்
இவையுடன் நானும்
உன்னுடன் இணையாவிட்டால்
தனியாய் அழகில்லை.
உபயோகிக்காத காலணிகள்
அடுக்கி வைத்திருக்கும் உடைகள்
இவையுடன் நானும்
உன்னுடன் இணையாவிட்டால்
தனியாய் அழகில்லை.
Subscribe to:
Posts (Atom)
