முன்குறிப்பு:
இதற்கு தகுந்த ஓவியமோ புகைப்படமோ இன்னும் அமையவில்லை :)
| ஆண்: ஆவணி மாச சாரல் காற்றே என் அத்தை பெத்த சின்ன முத்தே ஆளுக்கொரு தூணா சாஞ்சு நிக்கவா ஆளில்லா வீட்டுக்கு உன்னை வரச் சொன்னேன். |
பெண்: சித்திரை மாச தங்கக்கட்டி என் மாமன் பெத்த சிங்கக் குட்டி தூணப் புடிச்சு சாஞ்சு நின்னவ தானா வந்தா உன்னை கட்டிப்புடிப்பேன். |
| ஆண்: மதியம் செஞ்ச மீன் குழம்பு ருசிக்கவா அந்தி சாஞ்சு அரை மணி கழிச்சு திண்ணையில குத்தவெச்ச. |
பெண்: மதியம் செஞ்ச மீன் குழம்பு ருசிச்சவ ஊட்டி விடச் சொன்னா ஓடியா போயிருப்பேன். |
| ஆண்: பரண்மேல் கிடந்த படுக்கையை கடத்தி தனியா படுத்து உறங்கவா இத்தனை நாள் தவம் கிடந்தேன். |
பெண்: படுக்கையை கடத்தி தனியா படுத்து கிடந்தே மார்மீது சாயச் சொன்னா மாட்டேன்னா சொல்லியிருப்பேன். |
| ஆண்: கட்டுக்கோப்பா மாமன் கிடக்க கழட்டிவிட்ட கண்ணுக்குட்டி போல கண்டுங்காணாம திரியரையே |
பெண்: ஆறேழு வருஷம் முன்ன நடந்த ஓடிபுடிச்சு விளையாண்ட கதைய இப்படி செஞ்சும் உனக்கு புரியலையே. |
| ஆண்: பாதி சாமம் ஆன பின்னே ஊர் உறங்கி போன பின்னே பாவிப் பையன் என்னை பாத்து கைகொட்டி சிரிக்கிறியே |
பெண்: மீதி சாமம் உறங்காம உன்யேவலுக்கு காத்துக் கிடக்கேன் உரக்கச் சிரித்தும் உனக்கு உரைக்கலையே செவத்த தோலு மச்சானே. |
| ஆண்: ஏண்டி என்னை நோகடிச்சு ஒரு இராத்திரி வீணடிச்சு எந்த மலையை கரைக்கப் போற எப்போ வந்து என்மேல சாயப் போற. |
பெண்: இந்த சொல்லுக்கே ஒரு இராத்திரி கடத்திட்டியே மொத்த சொல்லையும் கொட்டிடாதே மத்த இராத்திரி வீணாயிடும். |

