நேர்கொண்ட பார்வை
எதிர்கொள்ள ஆயுதமில்லை
சீர்கொண்ட நடை
நினைத்துநினைத்து உறக்கமில்லை
நேசம்மிகு புன்னகை
சேமித்து வைக்க இடமில்லை
ஆழம்மிகுந்த வார்த்தை
அர்த்தம்தெரியும் ஞானமில்லை
அழகாய் நீயுடுத்தும் ஆடை
நூலாக அதில்நானில்லை
அடர்த்தியான கேசம்
துயில்கொள்ளும் எண்ணமில்லை
செழிப்புமிக்க தேகம்
அபகரிக்கும் ஆசையில்லை
பொய்யான கோபம்
புரிந்துகொள்ளும் மனமில்லை
வில்லென புருவம்
அம்பெய்திட நான்ராமனில்லை
தற்போது
எந்த தேசத்தில் நீ
அறிந்து சொல்ல அனுமனில்லை!

No comments:
Post a Comment