Saturday, August 29, 2015

யாவருக்கும் மத்தியில்

போலி புன்னகை
மரபைமறந்த விருந்தோம்பல்
அவசர நலம்விசாரிப்பு
அர்த்தமற்ற பேச்சு
இவை அனைத்திருக்கும் மத்தியில்
நண்பனின்றி தனித்துவாழ்....


கசிந்து உருகும் காதல் தொலைத்து
கணினி காண்பித்த காதல் வளர்த்து
தள்ளாடும் மனதும்
நிதானம் இழந்த பார்வையிலும்
நெசமற்ற நெஞ்சத்தினால்
காதலித்து கெட்டுப்போ....

சாபமிடும் நண்பன்
சண்டைபோடும் தம்பி
சத்தம்போடும் அப்பா
சந்தேகப்படும் அன்னை
யாவருக்கும் மத்தியில்
தினம் தினம் செத்துப்பிழை ...

No comments:

Post a Comment