சாய்ந்து கிடக்கும் பரிசலை
நன்றாக தேடி விட்டேன் .
இளம் வயதொத்த காதலர்கள்
எவரும் இல்லை.
தள்ளாடும் வயதில்
மறைத்து வைத்த காதலைச்சொல்லும்
கிழவன் கிழவி இல்லை .
நிழல் தேடி ஒதுங்கும்
எந்தவொரு விலங்கினமும்
இல்லை.
இந்த இடம்
காலியாகத்தான் இருக்கிறது.
என் தேவதை என்னை வேண்டாமென்று ஒதுக்கிய
என் இதயத்தை போல.
இத்தனை வருடங்களாய் காத்திருப்பது போல்
இந்த வருடமும் காத்திருக்கிறேன்
காணும் பொங்கல் அன்று.
ஒன்றுதான் விளங்கிற்று.
எவ்வுறவாயினினும்
களவாடப்படுகையில் சுகம்.
நிராகரிகப்படுகையில் இரணம்.

No comments:
Post a Comment