பட்டணம் தாண்டி பயணிப்பவர்க்கெல்லாம்
யாதும் ஊரே யாவரும் கேளீர் - குற்றமில்லை
தாய் தமிழ்நாட்டை கவனிக்க மறப்பதே குற்றம்.
நாத்திகம் ஆத்திகம் பேசி திரிபவர்
கோவிலும் அறிவியலும் வளர்த்தே ஓய்ந்தனர் - குற்றமில்லை
மண்ணும் மரமும் வளர்ப்பதை மறப்பதே குற்றம்.
காடும் மேடும் அலைந்து திரிந்து
வெள்ளையன் விதைத்த விசச்செடி அறுப்பவர்கள்
பிள்ளைகளை அதே தொழிலில் சேர்ப்பதே குற்றம்.
பிள்ளைகளை பெற்று பேணி வளர்த்து
பிற மொழி கல்வி கற்பிப்பது தவறில்லை
தாய் மொழி தமிழை தவிர்க்க சொல்வதே குற்றம்.
நாவிற்கு இனிய மொழி தமிழ் மொழி என்பதை
அம்மா என்றழைக்கும் ஆஸ்திரேலியன் மாடு உணர்ந்ததை
நாலு வேலை உண்டு கொளுத்த நாம் உணர மறுப்பதே குற்றம்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் - அன்று சொல்லிவிட்டார்
ஏர் பிடித்த கைகளெல்லாம் இன்று காலணா காசாகினர்.
குற்றம் குற்றம் இது கொடுமையான குற்றம்.
எவர் எப்படி இருப்பினும்
எவர் எக்குற்றம் புரினும்
எவர் தவறை உணர்வினும்
அடியேனின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ஆங்கிலத்தை வாய்மொழியாக கொண்ட
அனைத்து உலக தமிழர்க்கும்
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!
மழைக்கும் வெயில்லுக்கும் எதிர்பார்ப்பதை மறந்து
இலவசத்திற்கு நிற்கும் தமிழ் உழவர்க்கெல்லாம்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!!
யாதும் ஊரே யாவரும் கேளீர் - குற்றமில்லை
தாய் தமிழ்நாட்டை கவனிக்க மறப்பதே குற்றம்.
நாத்திகம் ஆத்திகம் பேசி திரிபவர்
கோவிலும் அறிவியலும் வளர்த்தே ஓய்ந்தனர் - குற்றமில்லை
மண்ணும் மரமும் வளர்ப்பதை மறப்பதே குற்றம்.
காடும் மேடும் அலைந்து திரிந்து
வெள்ளையன் விதைத்த விசச்செடி அறுப்பவர்கள்
பிள்ளைகளை அதே தொழிலில் சேர்ப்பதே குற்றம்.
பிள்ளைகளை பெற்று பேணி வளர்த்து
பிற மொழி கல்வி கற்பிப்பது தவறில்லை
தாய் மொழி தமிழை தவிர்க்க சொல்வதே குற்றம்.
நாவிற்கு இனிய மொழி தமிழ் மொழி என்பதை
அம்மா என்றழைக்கும் ஆஸ்திரேலியன் மாடு உணர்ந்ததை
நாலு வேலை உண்டு கொளுத்த நாம் உணர மறுப்பதே குற்றம்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் - அன்று சொல்லிவிட்டார்
ஏர் பிடித்த கைகளெல்லாம் இன்று காலணா காசாகினர்.
குற்றம் குற்றம் இது கொடுமையான குற்றம்.
எவர் எப்படி இருப்பினும்
எவர் எக்குற்றம் புரினும்
எவர் தவறை உணர்வினும்
அடியேனின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ஆங்கிலத்தை வாய்மொழியாக கொண்ட
அனைத்து உலக தமிழர்க்கும்
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!
மழைக்கும் வெயில்லுக்கும் எதிர்பார்ப்பதை மறந்து
இலவசத்திற்கு நிற்கும் தமிழ் உழவர்க்கெல்லாம்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!!
வேலையோ சூழ்நிலையோ பணமோ மனமோ
எதன் மீது குற்றம் சுமத்துவராயினும்
பொங்கல் பண்டிகையை கொண்டாட வராத
தமிழர்க்கெல்லாம் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!!!!

No comments:
Post a Comment