ஒவ்வொரு நாளும்
சேகரித்து வைத்த வார்த்தைகள்,
தேக்கி வைத்த ஆசைகள்,
கனவுகள், இன்னபிற நினைவுகள்
காற்றில் கலந்துவிட்டது.
இன்று ஏதுமின்றி வெறுமையில்.
கேட்பதோ, கொடுப்பதோ,
சிரிப்பதோ, அழுவதோ,
தொடுவதோ, இல்லை
உயிர் உருகி கரைவதோ,
இன்னபிற 'தோ' எல்லாம்
நெருப்பில் எரிந்துவிட்டது.
இன்று ஏதுமின்றி வெறுமையில்.
தொலைந்து போன தருணங்களை
தேடி திரிகையில், வயதின் முதிர்ச்சி
பார்வையிலும், இன்ன பிற உறுப்புகளிலும்.

No comments:
Post a Comment