Sunday, January 23, 2011

மன்மதன் அம்பு

பல நிமிடங்களுக்கு முன்பு
இடது கன்னத்தில் ஆரம்பித்து
வழியில் இரு உதடுகளை கடந்து
இன்னும் வலது கன்னத்தை அடைந்தபாடில்லை.

சத்தம் இல்லாமல், எச்சில் படாமல்
முத்த பரிமாற்றம் அறங்கேறிகொண்டிருக்கிறது.

கோலம் இடுவது யாதென எத்தனிக்க
முயன்று தோல்வியுற்றேன்; ஏமாந்தும் போனேன்.

நீ உனது விரல்களால் விளையாடிகொண்டிருக்கிறாய்.
கண் விழித்து பார்த்தேன்; மீண்டும் ஒரு முறை ஏமாற்றம்.
எதிரிலே நீ உறங்கி கொண்டிருக்கிறாய்.

சொப்பனம்தான் என்றாலும் எனது
இத்தனை வருட விருட்சம்
ஒரு நாழிகையில் சாம்பலானது.

No comments:

Post a Comment