எங்கெங்கு கானினும்
நாம் கரம் பிடித்து நடப்பது போல்தான் தெரிகிறது
ஏதோ ஒரு பிள்ளையின் பெயரை கேட்கும் பொழுது
நாம் நம் பிள்ளைக்கு வைக்க நினைத்த பெயர் நினைவில்வருகிறது
எங்கோ ஒரு பூங்காவில் வந்த சத்தம்
நம் முத்தச் சங்கீதத்தை அரங்கேற்றியது
எவரோ எவருக்கோ கோவிலில் அர்ச்சனை செய்ததால்
நம் முதல் சந்திப்பின் பேரானந்தம் மீண்டும் வந்தது
மோதிர விரலை பார்க்கும் பொழுதெல்லாம்
நம் திருமணம் ஏன் கிருத்துவ முறை படி நடந்ததென்று தோன்றுகிறது
இதெல்லாம் சொல்லத்தெரிந்த எனக்கு
இன்னொன்றை எப்படி சொல்வேன்?
நாளை என்னை கரம் பிடிக்க போகும் பத்தினிக்கு
நான் ராமன் இல்லை என்று?

No comments:
Post a Comment