Wednesday, January 12, 2011

இருவரும்

இருவரும் காத்திருக்கிறோம்
நீண்டதொரு உரையாடலின் முடிவில்
நிகழும் ஒரு அமைதிக்காக.

இருவரும் அறிந்தது
அவ்வமைதி எதற்காக என்று
அவ்வமைதி அர்த்தமுள்ளது என்று.

இருவரும் அறியாதது
அவ்வுரையாடல் அர்த்தமுள்ளதா என்பதை.

என்ன சொல்ல?
உதிர்ந்த அவ்வார்த்தைகளுக்கே வெளிச்சம்.

No comments:

Post a Comment