காத்தாடி பறக்க விட
எண்ணிய சிறு வயதில்
மொட்டை மாடி இல்லை
இன்று மாடிகள் பல உண்டு
சிறு வயது நினைவுகள்
வருவது இல்லை.
செல்லச் சிணுங்கல்களை செவி கொடுத்து
கேக்க கடன் பல வாங்கியதுண்டு
இன்று சொந்த கைபேசி உண்டு
சிணுங்கல்களை சிதற விட
காதலி இல்லை.
எதில் இழப்பு அதிகம் என்று
தெரியாமல்
வாழ்க்கை நகர்கிறது!!!

No comments:
Post a Comment