வயோதிகம் எங்களுக்குள்
புது வடிவம் எடுத்தது
இரணப்பட்டு கிடக்கும்
நம் மனதில் இனி
மரணம் ஒன்றுதான் நிம்மதி
தள்ளாடிச் சென்று
தண்ணீர் எடுக்க வேண்டும்
மரத்துப் போன
உடலென்றாலும் தினம்
குளித்துவிட வேண்டும்
திடிரென்று மரணபயம்
பற்றிக் கொள்ளும் ஆயினும்
மறுநொடியே அதுமாய்ந்துவிடும்.
நமது ஊரில்
தண்ணீர் குறையவில்லை
அழுது முடித்துவிட்ட
காரணத்தினால் நம் கண்ணில்
கண்ணீர்தான் வற்றிவிட்டது.
ஆண்டவனை தொழுது
பல புண்ணியங்கள்
பெற்றாகிவிட்டது
காயிந்து கிடக்கும் நிலங்கள்
போல முகத்தில்
கோடுகள் விழுந்துவிட்டது
சாய்ந்து கொள்ள
மடி கேட்ட காலம்
அது முடிந்துவிட்டது
பொத்திப் பொத்தி
வளர்த்த பிள்ளைகளை
புது உறவு தூக்கிச்சென்றது
பேரப் பிள்ளைகளை
பார்க்க ஆசை தூண்டும்
பாதியென குறைந்துவிட்ட
பார்வையால் வீதிகள்தாண்டி
நடந்துசெல்ல பயம்பற்றிக்கொள்ளும்
எனக்கு நீயும்
உனக்கு நானும்
என்றாகிவிட்டது
மீண்டும்மொரு முறை
குழந்தைபருவம் வந்தது
பார்த்துக்கொள்ளத்தான்
பெற்றோர்கள் இல்லை.

No comments:
Post a Comment