பணி முடித்து வீடு செல்ல
ஆயுத்தமாகும் பொழுது
அரை மணி நேர வேலை என்று
நமக்கு மூத்தோர் உரைப்பார்.
நாளை விடுப்பை காலையில்
ஞாபக படுத்தும் பொழுது
இரண்டு நாள் வேலையை இன்றே
முடித்து விட்டு செல் என்பார்
நண்பன் வந்திருக்கிறான் மதிய உணவு
அருந்த செல்கிறேன் என்றால்
என்றோ வெற்றியடைந்த ஒரு வேளைக்கு
இன்று குழு உணவு என்பார்
நண்பனின் வாகனத்தை கடன் வாங்கி
இரவு நேர ஆட்டத்திற்கு இரண்டு சீட்டு
எடுத்து வைத்திருந்தால், போகிற வழியில்
என்னை வீட்டில் இறக்கி விடு என்பார்
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை காலி
செய்வது போல் இராஜினாமா கடிதத்தை
கொடுத்தால் ஒ நீயுமா..
நாளை இப்பணிமனையில் தனது கடைசி நாள் என்பார்.
என்ன கொடுமை சரவணன் இது!!!
ஒரு நல்ல மேனேஜர் கிடைக்க....
அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும்!!!

No comments:
Post a Comment