மொழி தெரியாத பொழுது பலமுறை
இப்பேருந்து இந்நிருத்தத்தில் நிற்கும் என்றுரைத்த
பல நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்.
அழைத்ததும் விடியற்காலை என்று பாராமல்
என்னை வழியனுப்பி வைத்த நண்பர்களுக்கு
ஆயிரம் நன்றிகள்.
யாரென்று தெரியாது இரண்டு மணி நேர
பொழுதை கழிக்க விகடன் அளித்து உதவினார்ஒருவர்
அவருக்கு ஒரு நன்றி.
துளிர்விட்ட செடியை சக்கரத்திற்கு இரையாக்காமல்
தடுத்த ஏதோ ஒரு நல்ல உள்ளத்திற்கு
சில நன்றிகள்.
மறைத்து வைத்து என்ன பயன்?
சொல்லுவதால் ஒரு நிமிடம் புன்னகை செலவாகும்
பரவாயில்லை. இருந்தும் சொல்லுவோம்.
சின்ன சின்ன நன்றிகளில்
சிநேகம் துளிர்க்கட்டும்.

No comments:
Post a Comment