ஒவ்வொரு யாத்திரையிலும் ஓர் ஊர் அறிந்தேன்
ஒவ்வொரு நதியிலும் ஓர் சுவை அறிந்தேன்
ஒவ்வொரு உறவிலும் ஓர் உண்மை உணர்ந்தேன்
எங்கும் செல்லாமல் எப்படி உணர்ந்தேன் உன்னை?
வெயிலா பனியா முகில் தவழும் மலைதேசமா?
கடலை புயலா நிலவு தவழும் இருள்தேசமா?
காற்றா மழையா கற்கள் சூழ்ந்த பாறைதேசமா?
எங்கும் தேடாமல் எங்கு கண்டேன் உன்னை?
சிற்பமா சித்திரமா இதில் ஏதேனும் ஆர்வம் உண்டா?
பரதமா பாடலா இதில் உனது உயிரும் உண்டா?
கவியா? கல்வியா? இல்லை உலகுனர்ந்த அறிவிலா?
எந்த கலையும் கற்காமல் எப்படி கற்றேன் உன்னை?
அன்பா அழுகையா இல்லை கோவமா வீரமா?
பரிவா தாழாட்டா இல்லை பார்வையா பயமா?
இதயமா மூளையா இல்லை உயிரணுவை சிதைக்கும் காதலா?
எந்த உணர்வும் தெரியாமல் எதில் உணர்ந்தேன் உன்னை?
இன்று:
எப்படி இழந்தேன் உன்னை?
உணர்வற்ற உயிர் சுமந்து நடக்கும் எனை
இனி எப்போது காண்பாய்?

No comments:
Post a Comment