உலர்ந்த காலை பொழுதில் இலையிலோடும்
வெண்பனியல்ல நான்; பொன்கதிர் நான்;
அணு வெடித்து சிதறியதால் வந்த
மிட்சமல்ல நான்; ஆதியும் அந்தமும் நான் ;
இறைச்சிக்காக வெட்டப்படும் கஸ்தூரி
மானல்ல நான்; கானகம் காக்கும் காவலன் நான்;
குதித்து தற்கொலை செய்து கொள்ளும்
கண்ணீரல்ல நான்; கண்ணின் மணி நான்;
சித்திரம் எதுவாயினும் அதன் வண்ணம் நான்;
உருவம் எதுவாயினும் அதன் மூலம் நான்;
அறியாமல் இப்படி
சொப்பனத்தில் எத்தனை நான்?
இந்த இரவு இன்றோடு முடிந்தது
காலை புலர்ந்ததால்.

No comments:
Post a Comment