Thursday, June 17, 2010

முகமூடி

தெரிந்தவை சில. தெரியாதவை சில.

உலகில் ஒவ்வொன்றுக்கும்
ஓர் பெயர் உண்டு.
பெயரில்லாமல் ஏதேனும் உண்டா?

ஓடும் வரை நதி.
ஓய்ந்தேயிருந்தால் அதற்கு
ஒன்றா இல்லை பல உருவமா?

முப்பது நாளில் மோகம்
அறுபது நாளில் ஆசை
தேவை எண்ணிக்கையில் அன்பா?
இல்லை எண்ணிக்கையில்லா அன்பா?

ஏந்தி கேட்கும் கைகளும்
அள்ளி தரும் கைகளும்
ஒரே இடத்தில் உண்டு.
இதை தெய்வம் என்பதா?
இல்லை மனிதம் என்பதா?

இப்படி, தெரிந்தவை சில. தெரியாதவை சில.

இருந்தும் நமக்கு,
ஒரு இடத்தில் எல்லாம் தெரிந்தது போல் ஓர் முகமூடி.
மறு இடத்தில் ஏதும் தெரியாதது போல் ஓர் முகமூடி.

முகமூடி.
இந்த அணிகலனை களைய என் செய்வோம்?

No comments:

Post a Comment