தேகம் சிலிர்க்கும் ஓர் குளிரிரவில்
தூரத்து வெளிச்சத்தில்,
இருவர் நடக்கும் இடைவெளியில்
இருவரும் நடந்தோம்.
சொல்கிறாயா?
ம். சொல்கிறேன்.
ஏங்கி தவித்து எழுதுகோள் பிடித்து எழுதுவேன்
அவன் பெயரை.
ஆனால் சொல்ல தெரியாது.
கருப்பு வெள்ளை வண்ணநிறத்தில் ஓவியம் வரைவேன்
அவன் முகத்தை.
ஏன் என்று தெரியாது.
ஊண்உடல் வருத்தி உண்ணும் உணவை தவிர்ப்பேன்
அவனுக்காக.
எதற்கென்று தெரியாது.
யாருமற்ற நேரத்தில் தேம்பி தேம்பி அழுவேன்
அவன் வருகைக்காக.
என்றுவருவான் தெரியாது.
அவன்நினைவு நேற்றா? இன்றா? நாளையா? நானறியேன்?
இல்லை என்றுமா?
நானறியேன்?
அந்த பிஞ்சு கரங்கள்,
சேலை பிடித்து இழுத்தும்,
அம்மா என்றழைத்தும்
வந்துவிட்டேன்.
என் செய்வேன்?
என் செய்வேன்?
சிதறியது நீர்த்துளிகள்,
இருவருக்கும்.
அடி பைத்தியகாரி.
தேவை உனக்கல்ல. நமக்கு.
புதிதாய் உயிர்பிப்போம்.
பெற்றவர் நாமென்று,
பெயர் சூட்டு விழாவிற்கு
அனைவரையும் அழைப்போம்.
இருள் விலகி இருவருக்கும்
இடைவெளி குறைந்தது.

No comments:
Post a Comment