யாருமற்ற பின்இரவில்
ஈரம்காயாத ஜன்னலில்
என்னை அழைத்துப்போக வந்திருக்கும்
உன்னை பார்த்ததும்
வரைந்து கொண்டிருக்கும்
உன் விரல்களை பிடித்தும்
என் அந்தியும் சாயும்.
உன்னை வந்தடையும் ஓவ்வொரு
தருணமும் ஓர் பிறப்பே.
உன் நினைவை சுமந்த ஓவ்வொரு
இதயமும் ஓர் கோயிலே.

No comments:
Post a Comment