Wednesday, March 25, 2009

சென்னைபட்டினம்

எத்தினி பேர்... நீ போ அண்ணாத்தே.. சால்னா கூட துன்ன முடியாது... என்ன சார்.. ஆட்டோ'வா.. ஹும்.. அங்க எல்லாம் சவாரி வராது.. பீச்சாண்ட போலாமா... பிரச்சனை பெஜாராயிரும்.. சில கெட்ட வார்த்தைகள்..

Hey.. wts up dude.. Sathyam all shows house full machan.. Mokha.. Minus one.. Lets have party.. Harley Davidson.. Audi.. wow.. Machi treat enga?... சில கெட்ட வார்த்தைகள்..

வெள்ளிக்கிழமை.. சதுர்த்தி.. கோயிலுக்கு போநியோ இல்லியோ... ஞாயிற்றுக்கிழமை சரவணபவன் வத்தை கொலம்பு எய் பார்த்தசாரதி.. நாழிஆயிடுத்து...அம்மா இன்னைக்கு கொஞ்சம் தயிர் சாதம் ஊறுகாய்... சிலசாபங்கள்..

வண்டிய ஓரங்கட்டு... License.. R.C Book.. insurance.. ஓரமா நட.. நடக்கும்போதும்ஹெல்மெட் போட்டுக்க.. C.M Route.. traffic clear pannanum.. நிக்காதே நவுரு... V.I.P. வீட்டு gate உடன் உறவாடும் பல காக்கிச்சட்டைகள்.. சில கெட்ட வார்த்தைகள்..

தி.நகர்.. சரவணா ஸ்டோர்ஸ்..போத்திஸ்.. ரஜனி படம்.. T.V. சீரியல்.. நெரிசலானவீதியில் பவர் கட்.. மொட்டைமாடியில் முழு வருட படிப்பு.. பேருந்து படிக்கட்டில்பெண்களும் பயணம்.. சில கெட்ட வார்த்தைகள்...

தலைவர் வாழ்க.. இந்த படை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.. தமிழுக்குஉயிர்.. மண்ணுக்கு உடல்.. சாகும் வரை உண்ணா விரதம்.. அய்யா வழி தனி வழி... தீவுத்திடலில் பொதுக்கூட்டம்.. சில கெட்ட வார்த்தைகள்...

இவர்கள் எல்லோருடனும் ஒவ்வொரு ஊரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள்.. சினிமா கனவிலும், வெளிநாடு மோகத்திலும், கனவுகளை பின்தொடர்ந்தும், இன்னும் ஏராளமாய், கூட்டம் கூட்டமாய்.. ஏன்? எதற்கு? எங்கே? எப்படி? எப்போது? எதற்கும் விடை தெரியாத ஒரு மக்கள் கூட்டம்.. இவர்களுக்கும்ஒட்டிக்கொள்கிறது சில கெட்ட வார்த்தைகள்...

வானவில் போல் வெவ்வேறு விதமான மனிதர்கள.. பழக்க வழக்கங்கள்.. தொலை நோக்கு சிந்தனையுடன் பாலம் கட்டும் பணிகள்.. அளவோடுஆர்ப்பரிக்கும் கடல்..

கருவிலே கலைக்காமல் இன்று தெருவிலே திரியும் சில குழந்தைகள்.. அவர்களுக்காகவே கருணை மாறாத சில உள்ளங்கள்.. இன்னும் ஏராளம்.. என்னுடைய முதல் வேலை.. பிரம்மச்சரிய வாழ்க்கை.. இதற்காக இந்த நகரத்தைபிடித்திருகிறதா?? பிறந்த ஊர்.. குடும்பம்.. நண்பர்கள்.. மற்றும் பலர்.. பிரியகாரணமான இந்த நரகத்தை பிடித்திருகிறதா?? தெரியவில்லை.. இருப்பினும்என்னை பொறுத்த வரையில்.. இது ஒரு விநோமான நகரம்.. ஏன் பார்வைக்கு இங்கு நாளும் ஒவ்வொரு வர்ணம்..

No comments:

Post a Comment