இதோ இன்று ஞாயிற்றுக்கிழமை.
8 மணிக்கெல்லாம் எழுந்தாகிவிட்டது.
சமையல் செய்ய சமையற்காரர்
வரவில்லை. நானே சமைக்கலாமா?
நூடுல்ஸ்!@#$%
ம்.. வேண்டாம்.
புது மாப்பிளையின் எதிரி
"உப்புமா" வை கொஞ்சம் செய்து பார்க்கலாமே.
மிகவும் சுலபம்
(பின் குறிப்பு: சமையல் தெரிந்தவர்க்கு).
அம்மாவும் தங்கையும் எழுதிக்கொடுத்த நோட்ஸில்
தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கியாயிற்று.
மணி 9.15.
வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு,
கோதுமை இரவை, தண்ணீர்
என்று ஒவ்வொன்றாக ஒரு தட்டில் எடுத்து வைத்தேன்.
வட சட்டி எடுத்து வைத்து
காஸ் ஸ்டோவ் பற்ற வைத்தேன்.
மணி 9.45.
ஒருவர் சாப்பிட எண்ணெய் 2 ஸ்பூன்
என்று எழுதி இருந்தது.
அதே போல் செய்தேன்.
ஒரு நிமிடம் முற்று பெற்றதும்
கடுகு போடசொல்லிஇருந்தது.
அதே போல் செய்தேன்.
மணி 9.47.
முப்பது வினாடிகள் பாற்றுக்கொண்டே
நின்றேன்.
அதுவரையில் நன்றாகத்தான் இருந்தது.
திடீரென்று,
அம்பி போல் இருந்த எண்ணெய்,
அந்நியன் போல் உருமாறி
எரிய ஆரம்பித்துவிட்டது.
என் கண் முன்னால்
சமையலறையில் ஒரு யாகம்..
என்ன செய்வது என்றறியாமல்
அடுப்பை அணைத்து
தண்ணியை உற்றினேன்..
தீ அணையவேயில்லை. ம்..
சட்றென்று தோன்றவில்லை
எரிவதற்கு காரணம் எண்ணெய் என்று.
அந்த பாத்திரத்தை எடுத்தேன்.
நீங்கள் எதிர்பார்த்தது தான்.
கைகளை சுட்டுக்கொண்டேன்.
மணி 10.15.
தீயின் அரங்கேற்றம் முடிந்திருந்தது.
உற்று நோக்கினேன்
பாத்திரத்தையும் என் கைகளையும்,
பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
ஒரு 15 நிமிடம் அமைதியாக இருந்தேன்.
மணி 10.30.
மதியம் 1 மணியளவில் பழரசம் அருந்திவிட்டு வந்தேன்.
என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பிடுவதற்கு
அதிகம் சிரமப்பட்டதும், குறைவாக சாப்பிட்டதும்
அன்றைக்குத்தான்.
அடுத்த நாள் காலை மணி 7.30
சமையற்காரர் கேட்டார்
" என்ன தம்பி, நேத்து சமைசீங்க போலே. பாத்திரம் எல்லாம் Make-up போட்டிருக்கு?????"
சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல்
"உப்புமா செஞ்சுருங்க" என்றேன்

No comments:
Post a Comment