யாருடைய கல்யாணம்
என்ற ஞாபகம் இல்லை
இருந்தும் நினைவில் இருந்து
அகலவில்லை உன் முகம்.
பாவாடை தாவணி,
ரெட்டைஜடை பிண்ணி
இரண்டு முலம் மல்லிகை பூ,
காதிற்கும் கன்னத்திற்கும் பாலமாய்
கம்மலும் ஜிமிக்கியும்,
அளவான ஆனால்
அழகான அலங்காரம்.
ஒவ்வொரு முறை நீ
தாண்டிச்செல்லும் போதும்,
எனக்கு மட்டும் கேட்கும் விதமாய்
ஒரு மெல்லிய இருமல்,
சிரிக்கிறாய் நீ...
புகைப்படம் எடுப்பவரிடம்
தப்பித்து என்கண்களில்
மட்டும் தட்டுப்படுகிறாய்.
பின்பு வெட்கப்பட்டு
சிரிக்கிறாய் நீ...
நான் பரிமாறும் சமயம்
உன் இழையில் மட்டும்
கூடுதலாய் ஒரு
"குலாப் ஜாமூன் "
சிரிக்கிறாய் நீ...
மூன்று மணிநேரம்தான் நீ
மண்டபத்தில் இருந்தாய்
இப்பொழுது கிளம்பப்போகிறாய்
வழியனுப்ப வந்தவன்போல்
எதேச்சையாய்
வாசல் வந்தேன்..
கை அசைத்தேன்..
சிரிக்கிறாய் நீ...
மகிழ்ச்சியுடன் சற்று மண்டபத்தினுள்
உற்று நோக்கியதும்தான்
உண்மை தெரிந்தது
ஒவ்வொரு ஜன்னலிலும்
என்னை போல்
"குலாப் ஜாமூன்"
தொலைத்தவர் எண்ணிக்கை.

No comments:
Post a Comment