எட்டு மணி நேர தூக்கம்
அம்மாவின் அரவணைப்பில் சோம்பல் முறிப்பது
பின்னர் சுடச்சுட காபி
செய்தித்தாளில் சினிமா செய்தி
செயற்கை அருவியில் (ஷோவேர்) குளிப்பது
இட்லி, தோசை, பொங்கல் எதுவாயினும் உண்பது.
எங்கோ இருப்பதாய் எண்ணிய நண்பனை எதிரில் பார்ப்பது
பேசி கொண்டு செல்லும் பொழுது எந்த பலுக்களிலும் அகப்படாதது
சட்டேன்று திரைஅரங்கில் நுழைந்து திரிஷாவை இரசிப்பது
என்ன பேசினோம் என்றறியாமல் காலை பொழுது கழிந்தது
நினைக்கையில் அகமும்முகமும் மலர்வது.
ஏதோ மறந்தவனாய் வீடு நுழைவது
எங்கு சென்றாய் என்று எல்லோரும் கடிந்து கொள்வது
காலை செய்த வேலைக்கு கொஞ்சம் உண்டு
உண்ட பின் களைப்பாறி பின் முற்பகல்
என்ன செய்வதென்று யோசித்து
அந்தி வரை ஏதும் செய்யாமல்
அரட்டை அடிக்க ஆழில்லாமல்
வீட்டில் இருப்பதை குற்றம் சொல்லி
தொலைக்காட்சி, கைபேசி என்று உறவாடி
இரவு தூங்க செல்லும்முன்
வரும் ஒரு உதயம் ஞாநோதயம்
"என்ன செய்தாய் உருப்படியாய் இன்று என்று!!!"
அசரீரீ.. எதிரொலி.. அப்பாவின் கேள்வி
எதுவாயினும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு
"நாளை செய்யறேன்.. இன்னைக்கு நான் Tired"
யாசிப்பது இவை.. வருடம் ஒரு முறையேனும் நிகழ வேண்டும் என்று..

No comments:
Post a Comment