சீக்கிரம் வாடா..
மாப்பிள்ளை சீக்கிரம்...
வண்டி கிளம்பிட போகுது..
சுருதி பிசகாமல்
வாரம் தவறாமல் நான்
சொல்லும் வார்த்தைகள்.
பிறந்த ஊர், பிறந்த வீடு,
பெற்றடுத்த தந்தை தாய்,
உடன்பிறந்த ஓரே இரத்தங்கள்,
ஓரே அலைவரிசை உள்ளங்கள்,
இவர்கள் எவரும் ஏதும் உரைப்பதில்லை.
இவர்கள் அல்லாத உயிர்கள் மட்டும்
உரக்க கேட்பர்
என்ன வைத்திருக்கீறீர்கள் உங்கள் ஊரில்?
யார் இருக்கிறார்கள் உங்கள் ஊரில்?
என்ன செய்வீர்கள் உங்கள் ஊரில் ?
இதோ அவர்களுக்கு என் பதில்.
மகிழ்ச்சி...
என்னை தவிர எல்லோரும்...
சந்தோஷமாய் இருப்பேன்...
உலகத்தின் ஓரே Oscar தமிழன்
உலகத்தின் ஓரே Olympic தங்கப்பதக்க இந்தியன்
என்ற பெருமிதம் மனதுக்குள் இருந்தாலும்
இரயில் நிலையம் வந்து இறங்கியதும்
யாரிடத்திலும் விளம்பரப்படு்த்
நான் இன்று வந்தேன்;
நாளை மீண்டும் சென்றுவிடுவேன்;
மழை இல்லை;
வெயில் அதிகம்;
இந்த தொன்றுதொட்ட கேள்விகள் எல்லாம்
மற்றவர் கேட்காமல்
நானாக விளம்பரப்படு்த்
பயணங்கள்
இரவில் தொடங்கி விடியலில் முடிவதால்
வந்து போக வந்து வந்து போக
எனக்கு சிரமங்கள் தெரிவதில்லை.
மற்றவர் கண்களுக்கு ஏனோ
விதவிதமாய் தோன்றுகிறது
"என்று தனியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்"
என்று நான் பாரதி போல் கூவப்போவதில்லை
உள் மனதுக்குள் வேந்து நொந்து கொல்வதோடு சரி
மீண்டும் அடுத்த வாரம்
சந்திப்போம்.
மாப்பிள்ளை ஸ்டேஷன் வந்துடுச்சு
தூங்குனது போதும் எழுந்துருடா..
இறங்கனும்..

No comments:
Post a Comment